Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Wed, 17 Aug 2022 10:25:49 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா உறுதி

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. எனவே அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து,இது நேற்றைய பாதிப்பான 8 ஆயிரத்து 813-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை மட்டும் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 86 ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து 15 ஆயிரத்து 220 பேர் குணமடைந்தனர்.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 54 ஆயிரத்து 64 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 58 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 134 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 208 கோடியே 57 லட்சத்து 15 ஆயிரத்து 251 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது

Tags :
|