Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 603 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 603 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Mon, 22 Aug 2022 08:08:31 AM

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 603 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: புதிதாக 603 பேருக்கு கொரோனா... தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 603 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், நேற்று புதிதாக 603 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,63,322-ஆக அதிகரித்துள்ளது.

number,recovered,tamil nadu,affected,corona ,எண்ணிக்கை, குணமடைந்தவர்கள், தமிழகம், பாதிப்பு, கொரோனா

தமிழகம் முழுவதும் ஆண்கள் 364 பேர், பெண்கள் 239 பேர் என 603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 90 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை 75, செங்கல்பட்டு 47 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா உயிரிழப்பு இல்லை.

இன்று ஒரு நாளில் மட்டும் 743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,9,342-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,947 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

Tags :
|