நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
By: vaithegi Sat, 29 Apr 2023 2:58:28 PM
இந்தியா: இந்தியாவில் கடந்த ஒரு மாதமாகவே கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி கொண்டு வருகிறது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,171 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து நேற்று விட இன்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்திவு ள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சுமார் 51,314 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.
இதற்கு மத்தியில் 40 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.