அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்தை கடந்தது
By: Karunakaran Sat, 04 July 2020 11:38:20 AM
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்த கொரோனா வைரஸு க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் 1 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 325 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடைய 43 லட்சத்து 63 ஆயிரத்து 112 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும் உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 63 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா காரணமாக 1,32,101 பேர் உயிரிழந்துள்ளனர்.