Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் மனைவி ஜில்லுடன் வந்து வாக்களித்த ஜோபைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மனைவி ஜில்லுடன் வந்து வாக்களித்த ஜோபைடன்

By: Karunakaran Sat, 31 Oct 2020 12:18:44 PM

அமெரிக்க அதிபர் தேர்தலில் மனைவி ஜில்லுடன் வந்து வாக்களித்த ஜோபைடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும் அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகின்றார். அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி என்றாலும், முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை அமெரிக்காவில் உண்டு.

கொரோனா பரவி வரும் இந்நிலையில் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவே முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உண்டு. அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சனிக்கிழமை புளோரிடாவில் வாக்களித்தார். தற்போது அதிபர் டிரம்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பிடன், அவரது மனைவி ஜில்லும் தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

us,presidential election,joe biden,vote ,அமெரிக்கா, ஜனாதிபதித் தேர்தல், ஜோ பிடென், வாக்கு

வில்மிங்டனில் உள்ள வாக்குச் சாவடியில் ஜோ பிடன் மற்றும் அவரது மனைவியும் வாக்களித்தனர். அதன்பின் ஜோ பிடன் பேட்டி அளிக்கையில், பிலடெல்பியாவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொலை செய்த நிலையில் வெடித்த வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

மேலும் அவர், நான் அதிபரானால் போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே அதிபர் தேர்தலையொட்டி கிட்டத்தட்ட 5 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வாக்களித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
|