Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தரகாண்ட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Wed, 15 July 2020 11:38:27 AM

உத்தரகாண்ட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சுக்குவாலா என்ற பகுதியில் இன்று அதிகாலை ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால், அந்த கட்டிடத்தில் தூங்கிக்கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

அதன்பின் இதுகுறித்து பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்த பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

uttarakhand,building collapse,3 death,rubble ,உத்தரகண்ட், கட்டிடம் இடிந்தது, 3 மரணம், இடிபாடு

தற்போது இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். டிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி உள்ளனர்.

இதனால் அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் மேலும் அங்கு உயிரிழப்புகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த கட்டிடம் இடிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags :