Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகள் திறப்பை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பள்ளிகள் திறப்பை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Fri, 09 June 2023 4:26:31 PM

பள்ளிகள் திறப்பை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: 2023-ம் ஆண்டு பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் 12/06/2023 அன்று பள்ளிகள் திறக்க இருக்கப்படுகிறது. மேலும் இந்த வார இறுதி நாட்களான இன்று முதல் 11-08-2023 வரையிலான (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) 3 தினங்களில் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அதன்படி தமிழ்நாட்டின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 650 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலும் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 850 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 1,500 பேருந்துகனை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

special buses,tamil nadu govt ,சிறப்பு பேருந்துகள்,தமிழ்நாடு அரசு

எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணித்திடுமாறு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கேட்டுக்கொண்டு உள்ளார்.இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து பேருந்து நிலையங்களிலும், போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும், மதுரை மற்றும் திருச்சியில் இருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளாது. எனவே, பயணிகள் மேற்குறிப்பிட்டு உள்ள பேருந்து சேவையினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Tags :