Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,635 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,635 ஆக உயர்வு

By: Monisha Mon, 14 Sept 2020 11:15:23 AM

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,635 ஆக உயர்வு

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 456 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 8,294 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை 13,028 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 25 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 162 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

virudhunagar district,corona virus,infection,death,treatment ,விருதுநகர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 14,635 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 2,200 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 8,294 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

2 தினங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்படாமல் இருந்த 1,600 பேரின் மருத்துவ பரிசோதனையில் முடிவுகள் ஏதும் தெரிவிக்கப்படாத நிலை நீடிக்கிறது. தற்போதுள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலவரம் மாவட்ட மக்களுக்கு தெரிய முடியாத நிலையே நீடிக்கிறது.

Tags :
|