Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர் மழை எதிரொலி .... நீலகிரி 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தொடர் மழை எதிரொலி .... நீலகிரி 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

By: vaithegi Thu, 14 July 2022 08:04:51 AM

தொடர் மழை எதிரொலி .... நீலகிரி 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

நீலகிரி: நீலகிரியில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரம் அடைந்து உள்ளது. தொடர் மழை பெய்து கொண்டு வருகிறது. அவ்வப்போது கனமழையும், சாரல் மழையும் பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்து உள்ளது.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டால் 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

holiday,nilgiris ,விடுமுறை ,நீலகிரி

இதை தொடர்ந்து மழை காரணமாக ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேலும் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா போன்ற 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் விடுமுறை அறிவித்து கலெக்டர் அம்ரித் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Tags :