Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள்… மக்கள் அச்சம்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள்… மக்கள் அச்சம்

By: Nagaraj Thu, 25 May 2023 09:50:46 AM

மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள்… மக்கள் அச்சம்

மணிப்பூர்: மீண்டும் வன்முறை சம்பவங்கள்... மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் தலை தூக்கியுள்ளன. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இம்பால் மேற்கு மாவட்டம் கடங்காபாத்தில் மூன்று இடங்களில் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

manipur,violence,civilians,security adviser,situation ,மணிப்பூர், வன்முறை, பொதுமக்கள், பாதுகாப்பு ஆலோசகர், நிலைமை

சில ஆயுதமேந்திய விஷமிகள் குன்றில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.இதில் ஒருவர் விரல் சேதம் அடைந்தது. எல்லைப் பாதுகாப்புப் படையினரும், மணிப்பூர் போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார். இருப்பினும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதால் பொதுமக்கள் மத்தியில் வெகுவாக அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags :