செட்டிநாடு குழுமத்தின் 50 இடங்களில் வருமானவரித்துறை திடீர் ரெய்டு
By: Nagaraj Wed, 09 Dec 2020 10:07:33 AM
வருமான வரித்துறை திடீர் சோதனை... செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான, சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செட்டிநாடு குழும நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடந்து வருவதாக
தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வரி ஏய்ப்பு
காரணமாக தொடர்ந்து பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து
வருகின்றனர்.
குறிப்பாக கடந்த வாரம் மதுரை ஹெரிடேஜ் குழுமத்திற்கு
சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஏவிஎம் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை
அதிகாரிகள் சோதனை செய்தனர்.இதில் கணக்கில் காட்டப்படாத வகையில் பல கோடி
ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.