- வீடு›
- செய்திகள்›
- தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிப்பு...ஒரே நாளில் 68 ஆயிரத்து 111 பேருக்கு பரிசோதனை
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிப்பு...ஒரே நாளில் 68 ஆயிரத்து 111 பேருக்கு பரிசோதனை
By: Monisha Mon, 24 Aug 2020 10:43:28 AM
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான நேற்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-
மாநிலத்தில் நேற்று 5 ஆயிரத்து 975 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.
நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 541 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 47 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 19 ஆயிரத்து 327 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 97 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தது. அதன்படி மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 68 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்து 63 ஆயிரத்து 624 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்து 127 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்து 6 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.