Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் 14 மண்டலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு

சென்னையில் 14 மண்டலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு

By: Monisha Fri, 02 Oct 2020 4:00:15 PM

சென்னையில் 14 மண்டலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களாக அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இருந்தது. தற்போது 1200-க்கும் மேல் அதிகரித்துள்ளது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கோடம்பாக்கம், அண்ணாநகர் மண்டலங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமக இருந்து வருகிறது. இந்த 2 மண்டலங்களில் கடந்த 2 மாதமாக மொத்த பாதிப்பு 1000-க்கும் மேலாக உள்ளது.

மற்ற மண்டலங்களில் தொற்றுப்பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. ஆலந்தூர் மண்டலம் தவிர 14 மண்டலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள சூளைமேடு, நுங்கம்பாக்கம், மெரினா பகுதியில் தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் 344 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 20-ந்தேதி 759 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 30-ந்தேதி 1103 ஆக அதிகரித்துள்ளது. இந்த பாதிப்புக்கு முக்கிய காரணம் அலுவலகம் மற்றும் பொது இடங்களில் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றாததே என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

chennai,corona virus. infection,treatment,death ,சென்னை,கொரோனா வைரஸ்.பாதிப்பு,சிகிச்சை,பலி

இதேபோல அடையார், வளசரவாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர் மண்டலங்களிலும் தொற்று பாதிப்பு 100-ல் இருந்து 300 ஆக அதிகரித்துள்ளது. இந்த பகுதிகள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், மார்க்கெட், பஸ் நிலை நிறைந்ததாகும். இதனால் இங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. மக்கள் தற்போது பஸ், ரெயில் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வதன் மூலமாகவும் தொற்று அதிகரித்து வருகிறது.

கோடம்பாக்கத்தில் 1279, அண்ணாநகரில் 1188, தேனாம்பேட்டையில் 1147 என பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளன. குறைந்த அளவு பாதிப்பாக மணலியில் 221, திருவொற்றியூர் 300, சோழிங்க நல்லூர் 322 ஆக உள்ளது. தண்டையார் பேட்டையில் 766 பேர், ராயபுரத்தில் 885, திரு.வி.க.நகரில் 972, அம்பத்தூரில் 817, அடையாரில் 1072 என பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சென்னையில் கடந்த 20-ந்தேதி கொரோனா பாதிக்கப்பட்ட 9,706 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். 30-ந்தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 11,320 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 11,615 பேர் (7 சதவீதம்) பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 846 பேர் குணம் அடைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags :