Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1748 ஆக அதிகரிப்பு

கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1748 ஆக அதிகரிப்பு

By: Nagaraj Wed, 01 July 2020 8:26:02 PM

கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1748 ஆக அதிகரிப்பு

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு... கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1748 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 37 பேர் இன்று (புதன்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேநேரம் இவர்களில் 6 கடற்படை வீரர்களும் உள்ளடங்குவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 842 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

healed,corona,sri lanka,treatment,hospital ,குணமடைந்தவர்கள், கொரோனா, இலங்கை, சிகிச்சை, வைத்தியசாலை

இலங்கையில் மொத்தமாக 904 கடற்படையினர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 62 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இதுவரை 2047 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 1711 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஏனையவர்களில் 288 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|