செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,088 ஆக அதிகரிப்பு
By: Monisha Tue, 09 June 2020 5:15:07 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நாட்டில் மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் நோய்த்தொற்றில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 17,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 286-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரித்துள்ளது. 11,256 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 224-ஆக உள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 1,988 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,088 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 788 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர்.