ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகர்ப்பு
By: vaithegi Sat, 02 Sept 2023 10:01:56 AM
தருமபுரி: நீர்வரத்து 8,000 கனஅடியாக உயர்வு ... தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 30-ம் தேதி காலை நீர்வரத்து விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
இந்த நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதையடுத்து தமிழகத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து அங்கு உள்ள அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுதவிர, காவிரி ஆறு அமைந்து உள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டு வருகிறது. இந்தக் காரணங்களால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து அதிகரித்து உள்ளது.