Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு .. உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு .. உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

By: vaithegi Thu, 30 Nov 2023 09:32:15 AM

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு  ..  உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை: 6000 கனஅடி உபரிநீர் திறப்பு ...செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியாக உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. எனவே இதன் காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் நீர்மட்டமானது 22.53 அடியாக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக இரவு வினாடிக்கு 2088 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 3098 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபநிநீர் திறக்கும் பணி தொடங்கியுள்ளது.

surplus water,irrigation ,உபரி நீர் ,நீர்வரத்து

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 6,000 கனஅடி ஆக உயர்ந்துள்ளது. 2500 கனஅடியிலிருந்து 6000 கன அடியாக உபரி நீர் திறப்பின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. இங்கிருந்து வெளியிடப்படும் நீர் சிறுகளத்தூர் ,திருமுடிவாக்கம் ,வழுதலம்பேடு, திருநீர்மலை, அனகாபுத்தூர் நீர் வழி கால்வாய்கள் மூலம் அடையாறு ஆற்றில் கலக்கிறது.

இதன் காரணமாக அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டு வருகிறது.

Tags :