Advertisement

இலங்கையில் டீசல், மண்எண்ணெய் விலை அதிகரிப்பு

By: Nagaraj Sat, 12 Nov 2022 10:46:46 AM

இலங்கையில் டீசல், மண்எண்ணெய் விலை அதிகரிப்பு

கொழும்பு: விலை அதிகரிப்பு... டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி டீசல் லிட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரித்து 430 ரூபாயாக உள்ளது, மேலும் மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றின் விலை 25 ரூபாவினால் அதிகரித்து 365 ரூபாவாக விற்பனையாகிறது என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

diesel,kerosene,discontent,public,price hike ,டீசல், மண்எண்ணெய், அதிருப்தி, பொதுமக்கள், விலை உயர்வு

இதேவேளை ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என்பதோடு லங்கா ஐ.ஓ.சியும் டீசல் விலையை 15 ரூபாவால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பொருளாதார நிலை மோசமாக உள்ள நிலையில் தற்போது இந்த விலை உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர்.

Tags :
|
|