Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மணிப்பூரில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

மணிப்பூரில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

By: vaithegi Thu, 25 May 2023 10:41:31 AM

மணிப்பூரில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

மணிப்பூர் : மணிப்பூரில் 3 வாரங்களுக்கு முன்பு இனக்கலவரம் தொடங்கியதிலிருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வு .... கடந்த சில நாட்களாக மணிப்பூர் மாநிலத்தில் பயங்கர கலவரம் நடந்து வருகிறது. குக்கி மற்றும் மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட இந்த மோதல், வன்முறையாக மாறியது. இக்கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த நிலையில், மணிப்பூரில் கலவரத்தின் தாக்கத்தால் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. அங்கு கலவரம் காரணமாக வெளி மாநிலங்களிலிருந்து பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு பொருட்கள் சாதாரண விலையை விட இரட்டிப்பாக விற்கப்படுகின்றன.

manipur,essentials ,மணிப்பூர் ,அத்தியாவசியப் பொருட்கள்

அதன்படி, சமையல் கேஸ் விலை ரூ.1800-ஐ எட்டியுள்ள நிலையில், 1 லிட்டர் பெட்ரோல் ரூ.170 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அந்த பகுதி மக்கள் விலை உறவு குறித்து புகார் தெரிவிக்கின்றனர். முன்பு, 50 கிலோ கொண்ட 1 மூட்டை சூப்பர்ஃபைன் அரிசி ரூ.900 ஆக இருந்தது, ஆனால் இப்போது ரூ.1,800 ஆக உயர்ந்துள்ளது.

முட்டை விலை ரூ.10, 1 கிலோ உருளைக்கிழங்கு ரூ.100 ஆக அதிகரிப்பு.இதையடுத்து இந்த வன்முறையின் போது 71 பேர் உயிரிழந்தனர் என்றும், 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் 1700க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன.



Tags :