இந்த ரயில்களின் வேகம் அதிகரிப்பு
By: vaithegi Sun, 11 Dec 2022 12:33:21 PM
சென்னை: பயண நேரம் குறைப்பு ... மக்களின் தேவைகளுக்கேற்ப ஓரிடத்திலிருந்து ஓரிடத்திற்கு தினந்தோறும் பயணம் செய்து கொண்டு வருகின்றனர். இதில் ஏழை எளிய சாமானிய மக்களும் பயணம் செய்ய ஏதுவாக இருப்பது ரயில்வே துறை. காரணம் இதன் கட்டணமும் குறைவு.
இதனை அடுத்து திருநெல்வேலியில் இருந்து திருச்செந்துாருக்கு 61 கி.மீ.ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இருந்து 7 ரயில்கள் திருச்செந்துாருக்கு இயக்கப்படுகிறது.
இந்த ரயில்கள் ஆனது தற்போது 70 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றது. வேகத்தை உயர்த்த ரயில் பாதையை பலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதையடுத்து தற்போது ரயில் வேக சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளாதால் திருநெல்வேலி – திருச்செந்துார் செல்லும் ரயிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் 110 கி.,மீ வேகத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அது போன்று செங்கோட்டை – கொல்லம், திண்டுக்கல் – பழநி – பொள்ளாச்சி, மதுரை – விருதுநகர் ஆகிய பகுதிகளில் ‘லுாப் லைனில்’ ரயில்கள், 15 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் வேகம் 30 கி.,மீ ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.