உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த மானியம் உயர்வு
By: vaithegi Mon, 20 Nov 2023 5:18:27 PM
இந்தியா: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.918-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மானியத்துடன் சேர்த்து ரூ.600-க்கு பெறலாம் ...இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு மானியத்துடன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.
இதனை அடுத்து தற்போது உள்நாட்டில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.918க்கும், வணிக உபயோக சிலிண்டரின் விலை ரூ.57 குறைந்து ரூ.1,942க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை எளியோருக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மானியம் ரூ.300 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து பொது மக்கள் வீட்டு உபயோக சிலிண்டரை ரூ.300 மானியத்துடன் சேர்த்து ரூ.600க்கு பெறலாம்இந்தியாவில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சிலிண்டர் விலை மற்றும் பெட்ரோல், டீசலின் விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.