Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

By: Nagaraj Sat, 19 Dec 2020 09:58:52 AM

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பக்தர்கள் வருகை அதிகரிப்பு... சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிய தொடங்கியுள்ளது.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். சனி பெயர்ச்சி, சனி பரிகாரம் செய்வது என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் தர்பாரண்யேஸ்வரர் கோயில்.

இந்நிலையில் டிசம்பர் 27-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் திருநள்ளாறு கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

saturation,pilgrims,visit,increase,early morning ,சனிப்பெயர்ச்சி, பக்தர்கள், வருகை, அதிகரிப்பு, அதிகாலை

சனிப்பெயர்ச்சிக்கு முன்வரும் முதல் சனிக்கிழமை என்பதால் திருநள்ளாறு கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இன்று முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. வரும் டிச.27 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்வது குறிப்பிடத்தக்கது.

Tags :
|