விமானத்தின் மூலம் வரும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை உயர்வு
By: Nagaraj Sat, 15 Aug 2020 6:42:08 PM
சர்வதேச பயணிகள் எண்ணிக்கை உயர்வு... விமானத்தின் மூலம் வரும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை மார்ச் நடுப்பகுதியில் இருந்து உயர்ந்துள்ளதாக கனடா எல்லை சேவைகள் முகமை (சிபிஎஸ்ஏ) தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒகஸ்ட் 3ஆம் திகதி மற்றும் 9ஆம் திகதிக்கு இடையில், 56,122 விமானப் பயணிகள் கனடாவிற்குள் நுழைந்தனர். 14,809பேர் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளனர். 41,313பேர் பிற சர்வதேச விமானங்களில் வந்துள்ளனர்.
மார்ச் 23ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை 129,195 பயணிகள் நாட்டிற்கு
வந்தபின் இது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். ஆனால், 2019ஆம் ஆண்டிலிருந்து
94 சதவீதம் குறைந்துள்ளது.
ஏப்ரல் மாதம் 14,000 விமானப்
பயணிகளுக்கும் 22,000க்கும் இடையில் அதிகரித்துள்ளன. ஏப்ரல் 27ஆம் திகதி
மற்றும் மே 3ஆம் திகதிக்கு இடையில் மிகக் குறைவு. விமானப் பயணம் கடந்த
ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 98 சதவீதம் குறைந்துள்ளது.
புள்ளிவிபரங்கள் மே மாத இறுதியில் இருந்து மெதுவாக முன்னேறுவதைக்
காட்டுகின்றன. இது ஜூன் 29ஆம் முதல் ஜூலை 5 வரை 40,000ஐ எட்டும்.