Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரிப்பு

அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரிப்பு

By: vaithegi Thu, 13 Apr 2023 10:46:27 AM

அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரிப்பு

சென்னை: நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

நாளை சித்திரை மாதம் முதல் நாள் சுபகிருது தமிழ் வருடம் முடிந்து சோபகிருது தமிழ் வருடம் தொடங்குகிறது. தமிழ் புத்தாண்டில் மக்கள் வீடுகளை சுத்தம் செய்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

இதனை அடுத்து நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே தேவை அதிகரித்துள்ளதால் பூக்களில் விலையும் அதிகரித்துள்ளது.

flowers,market ,பூக்கள் ,மார்க்கெட்

அந்தவகையில் குமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில் நேற்று வரை கிலோ ரூ.350க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று ரூ.750 ஆக உயர்ந்துள்ளது. பிச்சிப்பூவும் ரூ.550ல் இருந்து ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குமரி மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி என அனைத்து பகுதிகளிலும் மல்லிகை, அரளிப்பூ, வெள்ளை செவ்வந்தி, மரிக்கொழுந்து என்று பல பூக்கள் விலை உயர்ந்துள்ளன.

தமிழ் புத்தாண்டையொட்டி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதும், விலை கூடியுள்ளதும் பூ வியாபாரிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :