மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
By: vaithegi Thu, 20 Oct 2022 7:59:40 PM
மேட்டூர் : அணைக்கு நீர்வரத்து உயர்வு ... மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரிநீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.
இதனால், காவிரி கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது.
இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அணையின் முழு கொள்ளவு எட்டியுள்ள காரணத்தால் அணைக்கு வரும் நீர் வரத்து அப்படியே திறந்துவிடப்படுகிறது.
இதனை அடுத்து தற்போது மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.05 கனஅடி நீர் வெளியேறி கொண்டு வருகிறது. இதனால் காவிரி கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.