Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

By: Monisha Tue, 08 Dec 2020 2:38:35 PM

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையினால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று காலையில் விநாடிக்கு 6 ஆயிரத்து 139 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் 7 ஆயிரத்து 999 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

rainfall,mettur dam,irrigation,increase,irrigation ,மழை,மேட்டூர்அணை,நீர்வரத்து,அதிகரிப்பு,பாசனம்

அதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நேற்று காலை நீர்மட்டம் 103.14 அடியாக உயர்ந்தது. இன்று காலை 8.00 மணிக்கு நீர்மட்டம் 103.52 அடியாக அதிகரித்தது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

Tags :