Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 12,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 12,000 கன அடியாக அதிகரிப்பு

By: vaithegi Wed, 26 July 2023 10:47:11 AM

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 12,000 கன அடியாக அதிகரிப்பு

சென்னை: டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிட்டார். இதையடுத்து அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 103.5 அடியாக இருந்த நிலையில் , நாள்தோறும் 10,000 கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது. ஆனால் அதேநேரம் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு மாதம்தோறும் திறந்து விடப்படும் தண்ணீர் வழங்கப்படாததால், மேட்டூர் அணையின் நீர்மட்டமானது தொடர்ந்து சரிந்து வந்தது. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இன்று 44 நாளை எட்டியிருக்கும் நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 66 அடியாக குறைந்திருக்கிறது.

இதனால் காவேரி டெல்டா பாசன தேவை பூர்த்தி ஆகுமா என்கிற சந்தேகம் ஒன்று எழுந்தது. இந்நிலையில் கர்நாடகா அரசுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தினார். தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும் என மத்திய அரசுக்கும் கடிதம் வாயிலாக வலியுறுத்தினார். இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்வரத்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் முதல் கட்டமாக கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நேற்று முன்தினம் 5000 கன அடி நீர் திறக்கப்பட்டது.

mettur dam,water release ,மேட்டூர் அணை, நீர் திறப்பு

அதனை தொடர்ந்து நேற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள இரு அணைகளுக்கும் தொடர்ந்து தண்ணீர் உயர்ந்து வந்ததன் காரணமாக, அணையின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் 17,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்றிரவு அது 23,000 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி 5, 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

ஒகேனக்கலில் வரும் நீரானது இன்று நண்பகலில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவானது மேலும் உயர வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 177 கன அடியாக உள்ளது. இதனால் நேற்றுவரை 10,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

Tags :