Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று...பாதிப்பு எண்ணிக்கை 6,217 ஆக உயர்வு

செங்கல்பட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று...பாதிப்பு எண்ணிக்கை 6,217 ஆக உயர்வு

By: Monisha Sat, 04 July 2020 2:07:46 PM

செங்கல்பட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று...பாதிப்பு எண்ணிக்கை 6,217 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 6,139 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 78 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,385 பேர் உயிரிழந்துள்ளனர்.

chengalpattu district,coronavirus,influence,kills,treatment ,செங்கல்பட்டு மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மாநிலத்தில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கையில் சென்னை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 6,139 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி மேலும் 78 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,217 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,113 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 106 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|