Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்; ஒரே நாளில் 79 பேர் பலி

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்; ஒரே நாளில் 79 பேர் பலி

By: Monisha Sat, 18 July 2020 09:54:55 AM

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்; ஒரே நாளில் 79 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 538 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,death,treatment ,தமிழ்நாடு, கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மாவட்டவாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:
அரியலூர் - 1
செங்கல்பட்டு - 184
சென்னை - 1,376
கோவை - 17
கடலூர் - 6
தர்மபுரி - 1
திண்டுக்கல் - 17
ஈரோடு - 8
கள்ளக்குறிச்சி - 10
காஞ்சிபுரம் - 59
கன்னியாகுமரி - 15
கரூர் - 6
கிருஷ்ணகிரி - 8
மதுரை - 138
நாகை - 1
நாமக்கல் - 1
நீலகிரி - 1
பெரம்பலூர் - 1
புதுக்கோட்டை - 10
ராமநாதபுரம் - 43
ராணிப்பேட்டை - 14
சேலம் - 11
சிவகங்கை - 23
தென்காசி - 3
தஞ்சாவூர் - 13
தேனி - 26
திருப்பத்தூர் - 2
திருவள்ளூர் - 147
திருவண்ணாமலை - 30
திருவாரூர் - 1
தூத்துக்குடி - 22
திருநெல்வேலி - 11
திருப்பூர் - 4
திருச்சி - 33
வேலூர் - 21
விழுப்புரம் - 26
விருதுநகர் - 24
வெளிநாடு - 1

Tags :
|