Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுதந்திர தின விழா கொண்டாட்டம் ... நாளை காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் முடியும் வரை போக்குவரத்து மாற்றம்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் ... நாளை காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் முடியும் வரை போக்குவரத்து மாற்றம்

By: vaithegi Sun, 14 Aug 2022 10:38:09 AM

சுதந்திர தின விழா கொண்டாட்டம்   ...    நாளை காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் முடியும் வரை போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் வரும் 15-ந் தேதி (நாளை) காலை 6 மணி முதல் விழா நிகழ்ச்சிகள் முடியும் நேரம் வரை முக்கிய சாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள போக்குவரத்து வகைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உழைப்பாளர் சிலை முதல் இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையும், கொடி மரச்சாலையிலும் அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர பிற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துச்சாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம் என்று கூறப்படுகிறது.

transportation,change , போக்குவரத்து,மாற்றம்

மேலும் பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துச்சாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.

அதே சமயம் அண்ணா சாலையில் இருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துச்சாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம். முத்துச்சாமி சாலையில் இருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம் என்று பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :