Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி ஒத்திகை

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி ஒத்திகை

By: Karunakaran Thu, 13 Aug 2020 1:55:08 PM

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி ஒத்திகை

இந்தியா முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா அன்று காலை டெல்லி செங்கோட்டையில் விழா கொண்டாட்டம் நடைபெறும். இந்த விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.

மேலும் மாநில தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் கொடி ஏற்றுகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதனை மாநில அரசுகள் பின்பற்ற மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

independence day,rehearsal,delhi red fort,india ,சுதந்திர தினம், ஒத்திகை, டெல்லி செங்கோட்டை, இந்தியா

தற்போது டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழாவுக்கான ஒத்திகை இன்று காலை நடைபெற்றது. மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் விமானநிலையம் போன்ற முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் சட்டம்-ஒழுங்கு பணியை உறுதி செய்ய பல்வேறு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

Tags :