Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கைக்கு இந்தியா மட்டும் 37 மொத்த கடனில் 39 சதவீதம் அளித்துள்ளது

இலங்கைக்கு இந்தியா மட்டும் 37 மொத்த கடனில் 39 சதவீதம் அளித்துள்ளது

By: vaithegi Tue, 19 July 2022 09:31:56 AM

இலங்கைக்கு இந்தியா மட்டும் 37  மொத்த கடனில் 39 சதவீதம் அளித்துள்ளது

கொழும்பு: வரலாறு காணாத மிக பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு அதிகமாக கடன் வழங்கியது இந்தியாதான் என தெரிய வந்துள்ளது. இதை இலங்கை நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதிவரை, இலங்கைக்கு மொத்தம் 96 கோடியே 88 லட்சம் டாலர் (ரூ.7 ஆயிரத்து 750 கோடி) வெளிநாட்டு கடன் கிடைத்துள்ளது. இதில், இந்தியா மட்டும் 37 கோடியே 69 லட்சம் டாலர் (ரூ.3 ஆயிரத்து 15 கோடி) கடன் அளித்துள்ளது.

sri lanka,india,loan , இலங்கை, இந்தியா, கடன்

இதனால் இது மொத்த கடனில் 39 சதவீதம் ஆகும். அடுத்தபடியாக, ஆசிய வளர்ச்சி வங்கி, 35 கோடியே 96 லட்சம் டாலர் (ரூ.2 ஆயிரத்து 876 கோடி) கடன் அளித்து, 2-வது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் உலக வங்கி உள்ளது. சீனா, மொத்த கடனில் 7 சதவீதம் மட்டுமே அளித்துள்ளது.

Tags :
|