Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2030-ம் ஆண்டு வரை இந்தியா, வியட்நாம் இடையிலான……. ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது

2030-ம் ஆண்டு வரை இந்தியா, வியட்நாம் இடையிலான……. ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது

By: vaithegi Thu, 09 June 2022 12:37:32 PM

2030-ம் ஆண்டு வரை இந்தியா, வியட்நாம் இடையிலான……. ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது

ஹனோய்:

3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆசிய நாடான வியட்நாமுக்கு சென்றார். அப்போது ராணுவ மந்திரி ஜெனரல் பான் வான் ஜியாங்கை சந்தித்து இந்தியா, வியட்நாம் இடையிலான ராணுவ உறவை 2030-ம் ஆண்டு வரை விரிவுபடுத்துவதற்கான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதன்படி, 2030-ம் ஆண்டு வரை இந்தியா, வியட்நாம் இடையிலான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தோ, பசிபிக் பகுதியின் ஸ்திரத்தன்மைக்கு இந்த ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவு முக்கிய காரணியாக உள்ளது. எனவே, வியட்நாமுடனான இந்த இரு ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

rajnath singh,minister of defense,india,vietnam ,இந்தியா, வியட்நாம், ராணுவம், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்

இரு நாட்டு ராணுவமும், பராமரிப்பு மற்றும் இதர பணிகளுக்கு தங்கள் ராணுவ தளங்களை எந்த ஒரு கருத்து வேறுபாடு இன்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது.



















Tags :
|