Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைனில் அமைதி நிலவ இந்தியாவின் பங்களிப்பு உண்டு... பிரதமர் மோடி தகவல்

உக்ரைனில் அமைதி நிலவ இந்தியாவின் பங்களிப்பு உண்டு... பிரதமர் மோடி தகவல்

By: Nagaraj Sat, 15 July 2023 4:57:28 PM

உக்ரைனில் அமைதி நிலவ இந்தியாவின் பங்களிப்பு உண்டு... பிரதமர் மோடி தகவல்

பிரான்ஸ்: இந்தியா தயாராக உள்ளது... உக்ரைனில் அமைதி நிலவ இந்தியா பங்களிக்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதிபர் மேக்ரனும், பிரதமர் மோடியும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 25 ஆண்டுகால பிரான்ஸ் நட்பை புதுப்பிக்கும் விதமாக இந்த சந்திப்பு அமைந்ததாக இருதலைவர்களும் விடுத்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

france,travel,completion,pm modi,french president,happiness ,பிரான்ஸ், பயணம், நிறைவு, பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர், மகிழ்ச்சி

இருதரப்பிலும் முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரபேல் விமானங்கள் ஒப்பந்தம் குறித்து விவரம் வெளியாகவில்லை. எனினும் 26 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாக பிரான்சின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இரவில் பாரீஸின் லோவ்ரே அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர்மோடி பிரான்சின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

Tags :
|
|