Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக் மோதலுக்கு பின் கடந்த 35 நாட்களில் 10 ஏவுகணைகளை சோதனை செய்த இந்தியா

லடாக் மோதலுக்கு பின் கடந்த 35 நாட்களில் 10 ஏவுகணைகளை சோதனை செய்த இந்தியா

By: Karunakaran Sun, 11 Oct 2020 3:08:44 PM

லடாக் மோதலுக்கு பின் கடந்த 35 நாட்களில் 10 ஏவுகணைகளை சோதனை செய்த இந்தியா

கடந்த மே மாத தொடக்கத்தில் லடாக் எல்லையில், சீன படைகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றதால் இந்திய -சீனா வீரர்களிடையே நிகழ்ந்த நேருக்கு நேர் மோதல், கடந்த ஜூன் மாதத்தில் உடல் ரீதியான மோதலாக உருமாறியது. அடுத்த 2 மாதங்களுக்குள் சீன ராணுவம் துப்பாக்கிச்சூட்டையும் நடத்தியது. இருநாட்டு எல்லைப்பகுதியை அமைதியின் பாதைக்கு திருப்புவதற்கு இருதரப்பும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

சீன ராணுவம் எல்லையில் இருந்து பின்வாங்க மறுப்பதால், அமைதி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்நிலையில், இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ. சமீப நாட்களாக ஏவுகணை சோதனைகளை அடுத்தடுத்து நிகழ்த்தி வருகிறது. வருகிற ஓரிரு நாட்களுக்குள் சப்-சானிக் ஏவுகணையான நிர்பயை சோதிக்க உள்ளது. இந்த ஏவுகணையையும் சேர்த்து 10 ஏவுகணைகள் 35 நாட்களில் சோதிக்கப்பட்டு இருக்கின்றன.

india,10 missiles,35 days,ladakh conflict ,இந்தியா, 10 ஏவுகணைகள், 35 நாட்கள், லடாக் மோதல்

இந்த தொடர் பரிசோதனைகள் வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல என டி.ஆர்.டி.ஓ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். லடாக்கில் இருந்து வெளியேற மறுக்கும் சீன ராணுவம் மீண்டும் வாலாட்டினால் அதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே டி.ஆர்.டி.ஓ. இந்த பரிசோதனைகளை வேகமாக நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். கொரோனா ஊரடங்கு தொடக்க நாட்களிலேயே, சீனாவை வெளியேற்றுவதற்காக நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

இதுவரை நடந்துள்ள 9 பரிசோதனைகளில் பிரமோஸ் ஏவுகணை (400 கி.மீ.), அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்ற சவுரியா சூப்பர்சானிக் ஏவுகணை, நீர்மூழ்கி எதிர்ப்பு டார்பிடோக்களை செலுத்தும் ஏவுகணை, அணு ஆயுத திறன்பெற்ற பிரித்வி-2 (இரவு நேர சோதனை) போன்ற ஏவுகணைகள் முக்கியமானவை ஆகும். விரைவில் பரிசோதிக்க இருக்கும் நிர்பய் ஏவுகணை லடாக்கின் மலைப்பாங்கான பகுதிகளுக்கு மிகுந்த பலனளிக்கும். இதைப்போல புதிய தலைமுறை ஆயுதமான சவுரியா ஏவுகணை 200 கிலோ வரையிலான அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு வினாடிக்கு 2.4 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் பெற்றவை ஆகும்.

Tags :
|