- வீடு›
- செய்திகள்›
- சர்ச்சைக்குரிய பதிவுகளை அதிகளவு நீக்க கோரிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடிப்பு
சர்ச்சைக்குரிய பதிவுகளை அதிகளவு நீக்க கோரிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடிப்பு
By: Nagaraj Fri, 28 Apr 2023 5:41:27 PM
நியூயார்க்: இந்தியாவும் இடம்பெற்றுள்ளது... டுவிட்டரில் பதிவிடப்படும் சர்ச்சைக்குரிய பதிவுகளை அதிகளவில் நீக்க கோரிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை மட்டும் பல்வேறு நாடுகளில் இருந்து 53 ஆயிரம் கோரிக்கைகள் பெறப்பட்டதாகவும், அவற்றின் அடிப்படையில் சர்சைக்குரிய பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தவறான தகவல்கள், வன்முறையை தூண்டும் பதிவுகள் என சுட்டிக் காட்டப்படும் அனைத்து சர்சைக்குரிய பதிவுகளும் டுவிட்டரில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
violence |
deleted |
twitter |