Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய இஸ்ரேலுடன் இணைந்த இந்தியா

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய இஸ்ரேலுடன் இணைந்த இந்தியா

By: Karunakaran Tue, 28 July 2020 10:47:22 AM

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய இஸ்ரேலுடன் இணைந்த இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பாதித்தவர்களை விரைவில் கண்டறிந்து, மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தினால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். தற்போதைய நிலையில் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் கொரோனா தொற்றை வேகமாக கண்டறிய நவீன கருவியை உருவாக்குவதில் மத்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, இந்த பணிகளில் இஸ்ரேலிய நிபுணர் குழுவுடன் இணைந்து டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் பணியாற்ற உள்ளனர்.

detect corona,corona infection,india,israel ,கொரோனா, கொரோனா தொற்று, இந்தியா, இஸ்ரேல் ஆகியவற்றைக் கண்டறியவும்

இஸ்ரேலிய உயர்மட்ட நிபுணர் குழு ஒன்று தங்கள் நாட்டில் உள்ள அதிநவீன கருவிகளுடன் சிறப்பு விமானம் மூலம் நேற்று டெல்லி வந்தது. இந்த நிபுணர்கள் இந்தியாவின் தலைமை விஞ்ஞானி விஜய் ராகவன் மற்றும் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல், இந்தியா இணைந்து உருவாக்கும் இந்த கருவி 30 வினாடிகளில் கொரோனா தொற்றை கண்டறியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரான் மால்கா இதுகுறித்து கூறுகையில், இது ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Tags :
|