Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு

கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு

By: Karunakaran Tue, 04 Aug 2020 10:55:03 AM

கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு

கொரோனாவுக்கு தடுப்பூசி உருவாக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றன. அமெரிக்கா, ரஸ்யா, சீனா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தடுப்பூசி உருவாக்குவதில் கடும் போட்டியில் உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் அவசரகால சுகாதார திட்ட செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரயான் நேற்று பேட்டி அளித்தபோது, கொரோனாவுக்கு சக்திவாய்ந்த தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முன்னணி இடம் வகிக்கிறது. அதுபோல், சக்திவாய்ந்த கொரோனா தடுப்பு மருந்துகளையும் தயாரித்து வருகிறது. எனவே, மொத்தத்தில் சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

india,corona vaccine,world health organization,michael rayon ,இந்தியா, கொரோனா தடுப்பூசி, உலக சுகாதார அமைப்பு, மைக்கேல் ரேயான்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது உண்மைதான். கொரோனா பரிசோதனைகளையும் இந்தியா நன்கு செய்துள்ளது. ஏற்கனவே 2 கோடி மாதிரிகளை பரிசோதித்துள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 லட்சம் மாதிரிகளை பரிசோதித்து வருகிறது. இருப்பினும், இந்தியாவில் கிராமப்புறங்களிலும் கொரோனா பரவி வருவது கவலை அளிப்பதாக மைக்கேல் ரயான் தெரிவித்துள்ளார்.

மேலும் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் ஆதனோம், கொரோனா பிரச்சினையில் உலக நாடுகள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. எதிர்காலத்தில் என்ன நடப்பதாக இருந்தாலும், அது நம் கையில்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|