இந்தியா – சிங்கப்பூர் இடையே ஆன்லைன் கட்டண இணைப்பு தொடக்கம்
By: Nagaraj Tue, 21 Feb 2023 9:04:15 PM
டெல்லி: இந்தியா – சிங்கப்பூர் இடையே ஆன்லைன் கட்டண இணைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர் ரவி மேனன் இருவரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே UPI-PayNow ஆன்லைன் கட்டண இணைப்பைத் தொடங்கினர்.
UPI-PayNow இணைப்பு குறித்த பிரதமர் மோடி கூறியதவது ஆன்லைனில் பணம் அனுப்பும் இணைப்பு UPI-PayNowஎங்கள் புலம்பெயர்ந்தோர்,தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பயனளிக்கும். இன்று, தொழில்நுட்பம் நம்மை பல வழிகளில் இணைக்கிறது. Fintech என்பது மக்களை ஒருவருக்கொருவர் இணைக்கும் ஒரு துறையாகும்.
பொதுவாக, அது ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் இன்றைய வெளியீடு எல்லை தாண்டிய ஃபின்டெக் இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கிறது. UPI-PayNow இணைப்பு (இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே) தொடங்கப்பட்டது, இரு நாட்டு குடிமக்களும் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
இதற்காக இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகள். கடந்த சில ஆண்டுகளில், புதுமை மற்றும் நவீனமயமாக்கலுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கு இந்தியா அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. எங்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம், நீங்கள் எளிதாக வியாபாரம் செய்யலாம். இதனுடன், டிஜிட்டல் இணைப்பைத் தவிர, நிதி உள்ளடக்கமும் ஊக்கத்தைப் பெற்றுள்ளது . இவ்வாறு அவர் கூறினர்