Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் - பில்கேட்ஸ்

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் - பில்கேட்ஸ்

By: Karunakaran Wed, 21 Oct 2020 1:33:40 PM

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் - பில்கேட்ஸ்

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. அதன்பின் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் உடனே கிடப்பது சந்தேகம் தான்.

இந்நிலையில் கிராண்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பங்கேற்றபோது அவர் பேசுகையில், எந்தவொரு அடுத்த தொற்றுநோயையும் சமாளிக்க உலகளாவிய சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் எந்தவொரு தொற்று நோயையும் திறம்பட சமாளிக்க தடுப்பூசி தளங்களை உருவாக்குவது அவசியம் என்று கூறினார்.

india,corona virus,corona vaccine,billgates ,இந்தியா, கொரோனா வைரஸ், கொரோனா தடுப்பூசி, பில் கேட்ஸ்

மேலும் நிகழ்ச்சியில் பேசிய பில்கேட்ஸ், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன்கள் முக்கிய பங்கு வகிக்கும். கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியா தனது மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் இந்தியா மிகவும் ஊக்கமளிக்கிறது என கூறினார்.

மேலும், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானதாக இருக்கும். பெரிய அளவில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என பில்கேட்ஸ் நிகழ்ச்சியில்

Tags :
|