Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஸ்காட்லாந்த் குருத்வாராவில் இந்திய தூதர் தடுக்கப்பட்ட விவகாரத்தால் பரபரப்பு

ஸ்காட்லாந்த் குருத்வாராவில் இந்திய தூதர் தடுக்கப்பட்ட விவகாரத்தால் பரபரப்பு

By: Nagaraj Sun, 01 Oct 2023 9:20:40 PM

ஸ்காட்லாந்த் குருத்வாராவில் இந்திய தூதர் தடுக்கப்பட்ட விவகாரத்தால் பரபரப்பு

லண்டன்: இந்திய தூதரை தடுத்ததால் பரபரப்பு... பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவிற்கு சென்ற, அந்நாட்டிற்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமியை, பிரிவினைவாத சீக்கிய அமைப்பை சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, இது குறித்து ரிஷி சுனக் தலைமையிலான பிரிட்டன் அரசிடம் புகார் தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கவ் நகரில் உள்ள குருத்வாராவிற்கு விக்ரம் துரைசாமி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பிரிட்டனில் வசிக்கும் சீக்கிய பிரிவினைவாதிகள், ‛உங்களை வரவேற்கவில்லை' எனக்கூறி தடுத்து நிறுத்தினர்.

இது தொடர்பாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கூறுகையில், குருத்வாரா கமிட்டியினரை சந்திக்க விக்ரம் துரைசாமி வந்திருந்தார். இது எங்களுக்கு தெரியவந்தது. சிலர் அவரை வழிமறித்து, உங்களை நாங்கள் வரவேற்கவில்லை எனக்கூறினோம். அப்போது இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது.

indian authorities,gurdwara,permission,agitation,britain,complaint ,இந்திய அதிகாரிகள், குருத்வாரா, அனுமதி, பரபரப்பு, பிரிட்டன், புகார்

இதனால், குருத்வாரா நிர்வாகிகள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், பிரிட்டனில் உள்ள எந்த குருத்வாராவிற்கும் இந்திய அதிகாரிகளை செல்ல அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்திய தூதர், குருத்வாராவில் பிரிவினைவாதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, இது குறித்து பிரிட்டன் அரசிடமும் புகார் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளது.

Tags :