Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தான் உளவுத்துறை சதித்திட்டத்தை முறியடித்த இந்திய ராணுவம்

பாகிஸ்தான் உளவுத்துறை சதித்திட்டத்தை முறியடித்த இந்திய ராணுவம்

By: Nagaraj Mon, 12 June 2023 7:31:50 PM

பாகிஸ்தான் உளவுத்துறை சதித்திட்டத்தை முறியடித்த இந்திய ராணுவம்

புதுடில்லி: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தீட்டிய சதித்திட்டத்தை இந்திய ராணுவத்தினர் முறியடித்துள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுவர்களை தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தி, நமது மண்ணில் தீவிரவாதத்தை பரப்ப நினைத்த, பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. தீட்டிய சதித்திட்டத்தை, இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

indian army,juvenile,terrorists,women,breakthrough ,இந்திய ராணுவம், வளரிளம் சிறார், தீவிரவாதிகள், பெண்கள், முறியடிப்பு

மத்திய பாஜக அரசின் தொடர் நடவடிக்கைகளால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதம் குறைந்து வரும் நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர், அந்நாட்டு உளவுத்துறையினர் தங்கள் சதித்திட்டத்தை நிறைவேற்ற புதியவழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

இந்தியாவின் நடப்பு மற்றும் ரகசிய தகவல்களை பரிமாறவும், போதைப்பொருள் கடத்தவும், சில சமயங்களில் ஆயுதங்களைக் கடத்தவும்.பெண்கள், யுவதிகள், வளரிளம் சிறார்களை, தீவிரவாதிகள் பயன்படுத்தி கொள்வதாக, இந்திய இராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் அஜிலா தெரிவித்துள்ளார்.

Tags :
|