இந்திய எல்லையில் ஊடுருவல் முயற்சி... பாகிஸ்தானை சேர்ந்தவர் சுட்டுக் கொலை
By: Nagaraj Sun, 09 Apr 2023 10:43:50 PM
பூஞ்ச்: ஊடுருவ முயற்சி... ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவத்தினர், எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபரை சுட்டுக்கொன்றனர்.
இன்று அதிகாலை, Shahpur பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாட்டம் இருந்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பயங்கரவாதி ஒருவன் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இரண்டு பேர் காட்டிற்குள் தப்பிச்சென்ற நிலையில், அப்பகுதியை சுற்றி வளைத்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Tags :
army |
search |
shooting |
pakistan |