Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டு புதிய உருமாறிய கொரோனாவை கண்டறிந்த இந்திய மருத்துவர்கள்

இரண்டு புதிய உருமாறிய கொரோனாவை கண்டறிந்த இந்திய மருத்துவர்கள்

By: Nagaraj Sat, 09 Sept 2023 4:27:52 PM

இரண்டு புதிய உருமாறிய கொரோனாவை கண்டறிந்த இந்திய மருத்துவர்கள்

புதுடில்லி: இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகில் இதுவரை எங்கும் கண்டறியப்படாத, 2 புதிய கொரோனா உருமாற்றங்களை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, 2020-ம் ஆண்டு இந்தியாவுக்குள்ளும் தடம் பதித்தது. 3 அலைகளாக பரவிய கரோனா வைரஸ், ஆல்பா, டெல்டா வகைக்கு பிறகு, ஒமைக்ரான் தொற்றாக உருமாற்றம் அடைந்தது.

இதையடுத்து இது அதிவேக பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பல லட்சக்கணக்கான மக்கள் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். இந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸிலிருந்து, கடந்தாண்டு செப்டம்பரில் எக்ஸ்பிபிஎனும் புதிய வகை வைரஸ் உருவானது. இதனை அடுத்து அதுமுதல், ஜனவரி மாதம் வரை இந்த வைரஸ் தொற்றால், 21,979 பேர் பாதிக்கப்பட்டனர்.

பொது சுகாதாரத்துறை மரபணு பகுப்பாய்வு கூடத்தில், கொரோனா உருமாற்றம் தொடர்பான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில், கடந்தாண்டு செப்டம்பர் முதல் 2023 ஜனவரி வரை 2,085 பேரின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 420 மாதிரிகளில் எக்ஸ்பிபி வகை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 98 மாதிரிகள் விரிவான நுண் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் உலகில் இதுவரை எங்கும் கண்டறியப்படாத, 2 புதிய கொரோனா உருமாற்றங்களை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

viruses,corona,public health ,வைரஸ்கள் ,கொரோனா ,பொது சுகாதாரத்துறை

இது தொடர்பான ஆய்வுக் கட்டுரையை பொது சுகாதாரத்துறை சமர்ப்பித்தது. அந்த கட்டுரையை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த லான்செட் இதழ் 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதையடுத்து இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சிவதாஸ் ராஜூ கூறியதாவது:

தமிழகத்தில் தீவிர கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் உலகில் வேறெங்கும் பதிவாகாத 2 புதிய வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. எனவே, கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளால் எக்ஸ்பிபி உருமாற்றத்தை தடுக்க முடியாது என்பதை அந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்து உள்ளோம்.

அதுகுறித்த அச்சம் தேவையில்லை. கொரோனா போன்ற பிற வைரஸ் தொற்றுகளையும் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்து உள்ளோம் என அவர் கூறினார்.

Tags :
|