மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இந்திய பெண் சமையல் கலைஞருக்கு அழைப்பு
By: Nagaraj Sun, 09 Apr 2023 4:01:25 PM
லண்டன்: இந்திய பெண் சமையல் கலைஞருக்கு அழைப்பு... இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க, இந்திய பெண் சமையல் கலைஞருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த பிறகு, அவரது மகன் சார்லஸ் அரியணை ஏறினார். இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6ம் தேதி நடைபெற உள்ளது.
தலைநகர் லண்டனில் நடைபெறும் இந்த ஆடம்பர விழாவில் பங்கேற்க உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 2,000 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இந்திய வம்சாவளி சமையல் கலைஞர் மஞ்சு மாலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
சிறந்த தொண்டு பணிகளுக்காக பிரிட்டிஷ் பேரரசு பதக்கம் பெறுபவர் என்ற வகையில் மஞ்சு மாலிக்கு இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரைப் போன்று பிரிட்டிஷ் பேரரசு பதக்கம் பெற்ற 800க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் முடிசூட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கான தொண்டு நிறுவனத்தில் சமையல் கலைஞராக பணிபுரியும் மஞ்சு மாலி, கொரோனா காலத்தில் மூத்த குடிமக்களுக்கு அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவருக்கு ராணி 2-ம் எலிசபெத், பிரிட்டிஷ் பேரரசு பதக்கத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.