Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுவதை முதல்முறையாக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்

கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுவதை முதல்முறையாக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்

By: Karunakaran Tue, 23 June 2020 12:10:09 PM

கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுவதை முதல்முறையாக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஐ.ஐ.டி-யின் புவி அறிவியல் துறை தலைவர் மணீஷ் குமார் தலைமையில் கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. குஜராத் உயிரிதொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஆமதாபாத் சிவில் ஆஸ்பத்திரியில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு வரும் கழிவுநீர் மாதிரிகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், கழிவுநீரில் கொரோனா வைரஸ் மரபணுவை ஒத்துள்ள 3 வைரஸ் படிமங்களும் கண்டறியப்பட்டுள்ளன. ஆமதாபாத் சிவில் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க இந்த கொரோனா வைரஸின் அடர்த்தியும் அதிகமாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

wastewater,coronavirus,corona infection,indian scientist ,இந்திய விஞ்ஞானிகள்,கொரோனா வைரஸ்,கழிவுநீர்,கொரோனா பரவல்

இத்தாலி போன்ற நாடுகள் ஏற்கனவே இதை கண்டுபிடித்துள்ளநிலையில், தற்போது அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இத்தாலியில் முதலாவது கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே கழிவுநீரில் கொரோனா வைரஸ் மரபணு போன்ற வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், மனிதர்கள் மூலம் கொரோனா பரவும் என்ற கண்ணோட்டம் மாறியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் கழிவுகளில் கொரோனா வைரஸ் இருப்பது சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டபின், இந்த ஆய்வு முடிவுகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் தற்போது கழிவுநீரில் வைரஸ் எப்படி பரவியது, அதை எப்படி தடுப்பது என்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags :