Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலி

By: Karunakaran Sun, 14 June 2020 1:24:37 PM

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலி

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்திய ராணுவ வீரர்களும், எல்லை அருகே உள்ள அப்பாவி மக்களும் உயிரிழப்பது அடிக்கடி நடைபெறுகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கொத்துக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

india,pakistan,kashmir attack,soldier ,பாகிஸ்தான், ராணுவ வீரர்,ஜம்மு காஷ்மீர்,இந்தியா

இதில் ஒரு வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பாகிஸ்தான் ராணுவம் குறிவைத்த கிராமத்தின் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே கடந்த 4-ந்தேதி ரஜோரி மாவட்டம் சுந்தர்பெனி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்த கொரோனா பாதிப்பு காலத்தில் எல்லையில் அத்துமீறி தாக்குதல், பயங்கரவாதிகள் ஊடுருவல் போன்றவை இந்திய எல்லையில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்திய எல்லைப்பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் ,சீனா, நேபாள ராணுவத்தினரும் இந்திய ராணுவத்தினருக்கும் மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|