Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரர்கள்

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரர்கள்

By: Nagaraj Sat, 28 Oct 2023 1:17:57 PM

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரர்கள்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் எல்லையில் அத்துமீறி தாக்குதல் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய ஆர்.எஸ்.புரா செக்டாரின் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

three years,ambush,surprise attack,security forces,border ,மூன்று ஆண்டுகள், பதுங்கு குழி, திடீர் தாக்குதல், பாதுகாப்புப்படை, எல்லை

தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும், பொதுமக்கள் 4 பேரும் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுடன் சிறிய ரக குண்டுகளும் வீசப்பட்டதில் வீடுகள் சிலவும் பாதிப்படைந்துள்ளன. இதற்கு இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

இதனிடையே, இரவு 8 மணியளவில் திடீர் தாக்குதல் தொடங்கியதாகவும், அச்சத்தில் மக்கள் பதுங்கு குழிகளில் மறைந்து கொண்டதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் இதுபோன்ற தாக்குதல் நடப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags :
|