Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் ஆற்றில் தத்தளித்த சிறுவர்களை காப்பாற்ற முயன்று நீரில் மூழ்கி இந்திய வாலிபர் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஆற்றில் தத்தளித்த சிறுவர்களை காப்பாற்ற முயன்று நீரில் மூழ்கி இந்திய வாலிபர் உயிரிழப்பு

By: Karunakaran Sun, 09 Aug 2020 1:21:50 PM

அமெரிக்காவில் ஆற்றில் தத்தளித்த சிறுவர்களை காப்பாற்ற முயன்று நீரில் மூழ்கி இந்திய வாலிபர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெர்ஷ்னோ நகரில் மன்ஜித் சிங் என்ற இந்தியர் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கிங்ஸ் ஆற்றுக்கு மன்ஜித் சிங் தனது உறவுக்காரர் மற்றும் நண்பர்கள் உடன் சென்றுள்ளார். அப்போது 2 சிறுமிகளும், ஒரு சிறுவனும் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

இதனை கண்ட மன்ஜித் சிங், உடனடியாக அவர்கள் 3 பேரையும் காப்பாற்ற முயற்சித்தார். தனது தலையில் அணிந்திருந்த டர்பனை கழற்றி கயிறாக பயன்படுத்தி சிறுவர்களை மீட்க முயற்சித்தும், அது பலன் அளிக்காததால் சிறுவர்களை காப்பாற்ற மன்ஜித் சிங் ஆற்றுக்குள் குதித்துள்ளார்.

indian teenager,death,river,america ,இந்திய இளைஞன், உயிரிழப்பு , நதி, அமெரிக்கா

ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்துள்ளது. மன்ஜித் சிங் சிறுவர்களை மீட்க ஆற்றுக்குள் குதித்த போது மன்ஜித் சிங் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் நீரில் மூழ்கினார். இதனால் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்கு முன்பே 2 சிறுமிகளையும், ஒரு சிறுவனையும் அங்கிருந்தவர்கள் போராடி மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதன்பின் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி மன்ஜித் சிங்கை தேடினர். சுமார் 40 நிமிடம் தேடுதல் வேட்டை நடத்தியபின், நீருக்கு அடியில் இருந்து மன்ஜித் சிங் பிணமாக மீட்கப்பட்டார். ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட 2 சிறுமிகளில் ஒரு சிறுமியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
|
|