Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சொகுசு கப்பலில் இருந்து குதித்த இந்திய பெண் இறந்து விட்டதாக தகவல்

சொகுசு கப்பலில் இருந்து குதித்த இந்திய பெண் இறந்து விட்டதாக தகவல்

By: Nagaraj Wed, 02 Aug 2023 7:46:17 PM

சொகுசு கப்பலில் இருந்து குதித்த இந்திய பெண் இறந்து விட்டதாக தகவல்

சிகாகோ: சொகுசு கப்பலில் இருந்து கடலில் குதித்த இந்திய பெண் பலியாகி விட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ரீட்டா சஹானி (64) என்ற பெண், தனது கணவர் ஜாகேஷ் சஹாஜானியுடன் ‘ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ்’ என்ற உல்லாசக் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், இந்த கப்பல் இருந்து சிகாகோ செல்லும் வழியில் ரீட்டா சஹானி குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரீத்தா சஹானியின் மகன் கூறுகையில், “கப்பலில் இருந்து தனது தாய் குதித்துவிட்டதாக கூறினர். முன்னதாக, இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்பட்டது. ஆனால், அது அவர்தான் என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. எனது தந்தையையும் கப்பலில் இருந்து இறக்கிவிட்டனர்.

india,sea,ship,woman, ,இந்தியா, கடல், கப்பல், பெண், பிரதமர் அலுவலகம்

இந்நிலையில், இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்து, அது தனது தாய் தான் என்றும் அவர் இறந்துவிட்டார் என்றும் தெரியவந்தது. அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தனக்கு உதவிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் அலுவலகம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். மேலும், கப்பலில் இருந்து இந்தியப் பெண் விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|
|
|
|